குழந்தையின்மையை காரணம் காட்டி மோசமாக பேசினார் – பூசாரி மனைவி வழக்கில் திடீர் திருப்பம்!


நகைக்காக பெண் கொல்லப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பால கணேஷ்(27). இவர் வடபழனி வேங்கீஸ்வரர் கோவிலில் குருக்களாக பணியாற்றி வருகிறார். பால கணேஷின் மனைவி ஞானபிரியா(24).

கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டில் கை, கால்கள் கட்ட நிலையில் ஞானபிரியா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் பால கணேஷ் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கி கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பால கணேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு நினைவு திரும்பியதை அடுத்து, போலீசார் விசாரித்தனர்.

அதில், நள்ளிரவில் வெளியே வந்த போது, மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் பால கணேஷ் மீது சந்தேகம் எழுந்தது.


தீவிர விசாரணையில் மனைவியை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் பால கணேஷை கைது செய்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக குழந்தையின்மையை காரணம் காட்டி, பால கணேஷை ஞானப் பிரியா குறை கூறி வந்துள்ளார்.

இதற்கிடையில் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு குடியேறி, 3 ஆண்டுகளாக கருவுறுதலுக்கான சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து பாக கணேஷின் கல்வித் தகுதி குறித்தும் மோசமாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி, கயிற்றோடு சென்றதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 3ஆம் தேதி, ஞானப்பிரியா திட்டும் போது சுத்தியால் தாக்கி கொன்றுள்ளார்.

இதனை தனது நண்பர் மனோஜிடம் இணைந்து நிறைவேற்றியுள்ளார். அவர் இருவரது கை, கால்களையும் கட்டி, நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!