வீட்டில் கிரஹண நாட்களில் கடலை எண்ணெய்யில் ஏன் விளக்கேற்ற வேண்டும்..?


பொதுவாக வீடுகளில் விளக்கேற்றுவதற்கு உகந்த எண்ணையாக நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் போன்றவற்றை மட்டும் பயன்படுத்துவார்கள். கடலை எண்ணையை யாரும் பயன்படுத்துவது கிடையாது.

கடலை எண்ணெயில் இருந்து வரும் ஒருவித நெடி பல தீமைகளை விளைவிக்கும் என்பதன் காரணமாகவே நமது முன்னோர்கள் கடலை எண்ணையை பூஜைக்கு பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

ஆனாலும், கிரஹணங்கள் ஏற்படும் தினங்களில் அவசியம் கடலை எண்ணெயில் விளக்கேற்றி வைக்கவேண்டும் என்றும் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


உண்மையில் கிரஹணங்கள் ஏற்படும் சமயங்களில் ஒருவித கெடுதல்தரும் கதிர்வீச்சுக்கள் பூமியெங்கும் பரவும், இதன்காரணமாகத்தான் பரிசுத்தமாக விளங்கும் கோவில்களைக்கூட திறப்பது கிடையாது.

கிரஹணங்கள் முடிந்ததும் ஒருசில பூஜை புணஸ்காரணங்களை செய்து ஆலயத்தை தூய்மைபடுத்திய பின்பே இறைவன் குடியிருக்கும் சன்னதிகளை திறப்பது வழக்கமாக இருக்கின்றது.

இவ்வாறு கிரஹணங்கள் ஏற்படும் சமயங்களில் தீய கதிர்கள் பரவும், அந்த தீய கதிர்கள் மனிதர்களுக்கு ஒருசில உபத்திரவாதத்தை தரும் என்பதால் அந்த சமயத்தில் உணவருந்துவதை தவிர்த்தனர் நமது முன்னோர்.


மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு தீய கதிர் வீச்சினால் எந்த கெடுதலும் ஏற்படக் கூடாது என்பதால் தான் அவர்களை தனி அறையில் இருக்குமாறும் பார்த்துக்கொண்டனர்,

இப்படி கிரஹணங்களில் இருந்து தங்களை பாதுகாத்த நமது முன்னோர், கிரஹணங்களின் போது வெளிவரும் கெடுதல் சக்திகளை தடுக்கும் வழிமுறையையும் கண்டறிந்தனர்.

அந்த வழிமுறைதான் கடலைஎண்ணெயில் விளக்கேற்றுவது.

கிரகணங்களின் போது கடலை எண்ணையை ஒரு (பெரிய) அகலில் ஊற்றி அதில் விளக்கு திரியை போட்டு, ஒன்று அல்லது பல இடங்களில் கடலை எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தனர்.


இவ்வாறு செய்வதால் கடலை எண்ணெய் விளக்கில் இருந்து வரும் ஒருவித நெடி வீடுகளில் பரவும்போது கிரஹணங்களால் ஏற்படும் தீய கதிர்களை அழித்துவிடுவதால் கிரஹணங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறையும் என்பதை கண்டறிந்து, கடலை எண்ணைய் தீபத்தை ஏற்றி வைத்தனர்.

குறிப்பு
கடலை எண்ணைய் தீபத்தை கிரஹணங்கள் ஏற்படும் சமயங்களில் மட்டும்தான் ஏற்ற வேண்டும். கிரஹணங்கள் இல்லாத சமயங்களில் கடலை எண்ணைய் தீபத்தை ஏற்றக்கூடாது.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!