சீக்கிரமே அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? வாரத்தில் ஒரு முறை இதை செய்யுங்க..!


அழகு என்பது நம்மை சந்தோகக்ஷப் படுத்துவது மட்டுமன்றி, மற்றவர்கள் முன்னிலையில் நம்மை சிறப்பாக முன்னிறுத்துகின்றது.

அழகிய தோற்றத்திற்கு மிருதுவான சருமமும், பொலிவான கூந்தலும் முக்கியமானது. இவை பெண்களிற்கு மட்டுமன்றி ஆண்களின் அழகிற்கும் அவசியமானது.

அழகிய அடர்த்தியான கூந்தலுக்கு எண்ணற்ற பல முயற்சிகளை செய்து வந்தாலும், போதியளவு தீர்வு கிடைப்பதில்லை. ஆனால் இந்த இயற்கை சிகிச்சை முறை பக்க விளைவற்ற சிறந்த பலனைத் தருகின்றது.

முடி வளர்வதற்கான சிகிச்சை முறை


சாதாரனமாக அனைவருக்கும் தினமும் 100 முடிகள் வரை உதிர்கின்றன. இந்த இயற்கை சிகிச்சை முறையினால் குறைந்த காலப் பகுதியில் அதிகளவான முடியை வளரச் செய்வதுடன், முடி உதிர்வதையும் தடுக்கின்றது.

தேவையான சேர்மானங்கள்

(1) பீர் (BEER) – ½ டம்ளர்

(2) வாழைப்பழம் – பாதி

(3) முட்டை மஞ்சள் கரு – 1

(4) தேன் – 1 மேசைக்கரண்டி


தயாரிக்கும் முறை

மேற் குறிப்பிட்ட அனைத்தையும் பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

கையினால் முடி உதிர்ந்த இடத்தில் இந்தக் கலவையை நன்றாக தடவி, 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

சிறிது நேரத்தில் அந்த இடங்களில் எரிச்சல் ஏற்பட்டால், நமது சிகிச்சை பலனளிக்க ஆரம்பித்ததை அறிந்து கொள்ளலாம்.

வாரத்தில் ஒரு தடவை இதை செய்து வருவதால், அடர்த்தியான கூந்தலைப் பெற முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!