மாவீரர் நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க தயாராகும் கிளிநொச்சி..!!


எதிர்வரும் 27ம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதிலும், கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியற் கட்சிகள் எனப் பலரும் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடாகி இருந்தது.

ஆனால், இந்த முறை இதுவரைக்கும் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!