பைக் சக்கரத்தில் சிக்கிய சேலையால் 6 மாதக் குழந்தை மரணம்… நடந்தது என்ன?


திசையன்விளை நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த சரவணனின் மனைவி சேலை பைக் சக்கரத்தில் சிக்கியதால் அவரது மடியிலிருந்து தவறி விழுந்து 6 மாத குழந்தை பலியானது.

திசையன்விளை அருகே உள்ள மேலபண்டாரகுளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சம்பவத்தன்று பொருட்கள் வாங்குவதற்காக தனது பைக்கில் மனைவி மற்றும் 6 மாத குழந்தை முனிசா ஆகியோருடன் திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சரவணனின் மனைவியின் சேலை பைக் சக்கரத்தில் சிக்கியது. இதனால் பைக் நிலைதடுமாறியது. இதில் அவரது மடியில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது.

தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!