இப்படிப்பட்ட பெண்களை தான் அதிகளவில் மார்பகப் புற்றுநோய் தாக்குகிறது என தெரியுமா..?


இன்றைய உலகில் புற்றுநோய் என்பது சாதாரண காய்ச்சலைப் போல் ஆகிவிட்டது. ஏனெனில் யாரைக் கேட்டாலும் புற்றுநோய்க்கு மருத்துவம் செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகளவில் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர். அதுசரி, இந்த மார்பகப் புற்றுநோய் ஏன் தோன்றுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?

மார்பகப்புற்று நோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. இருப்பினும் செல்களில் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம்.


பாலூட்டாத பெண்கள் மார்பகப்புற்று நோய்க்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹோர்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

பொதுவாக மார்பகப்புற்று நோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளிலேயே ஏற்படுகிறது. எனினும் இதுமற்ற செல்களிலும் ஏற்படலாம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர்முடிச்சு வழியாக உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.


பொதுவாக எல்லா நோய்களுக்குமே வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதி விரைவில் பூப்படைவது, புகை மற்றும் மதுபழக்கம், உடல்பருமன், மரபியல் போன்றவை மார்பகப்புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். எனினும் 10 முதல் 15 சதவிகித மார்பகப்புற்றுநோ மரபியல் காரணமாக ஏற்படுகின்றதுஎ ன்பது குறிப்பிடத்தக்கது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!