கடவுளுக்கு ஏன் வாழைப்பழம் படைக்கப்படுகிறது என்று தெரியுமா..?


வெற்றிலைப்பாக்கு, தேங்காய், வாழைப்பழம் ஆகியவை கட்டாயமாகப் படைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பல காரணங்கள் உண்டு.

அதிலும் குறிப்பாக, எவ்வளவோ பழங்கள் இருந்தாலும் கடவுளுக்கு பூஜை என்று வந்ததும் யாரும் சொல்லாமலே வாழைப்பழம் தான் நம் மனதில் தோன்றும்

கடவுளுக்குப் படைக்க வேண்டுமென்றாலே வாழைப்பழத்தைத் தான் நாம் படைக்கிறோம். இதற்கு பலர், வாழைப்பழம் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. மேலும் மற்ற பழங்களை விட விலை குறைவு என்றெல்லாம் சொல்வதுண்டு.

ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. அப்போ வேறென்ன காரணம் என்று தானே கேட்கிறீர்கள்… இதோ


மா, பலா, கொய்யா என் எந்த பழத்தை எடுத்துக் கொண்டாலும் அவை கொட்டையிலிருந்து முளைக்க ஆரம்பிக்கிறது.

அந்த பழங்களின் கொட்டை மனிதராலோ பறவையோலோ சாப்பிடப்பட்டு தூக்கியெறியப்படுகிறது. அதிலிருந்து கனி முளைத்து செடிகள் உருவாகின்றன.
அது எப்படியானாலும் ஏதோ ஒரு உயிரினத்தின் எச்சில் பட்டபின் உருவாகியது ஆகையால் கடவுளுக்குப் படைக்கப்படும் முதன்மையான கனியாக அது இல்லை.

அதேசமயம் வாழை மரம் கொட்டையிலிருந்து உருவாவதில்லை. அது மற்றொரு வாழைக்குருத்திலிருந்து வேர்விட்டு வளர்கிறது.

அதனாலேயே கடவுளுக்குப் படைக்கப்படும் தூய்மையான பழமாக வாழைப்பழம் கருதப்படுகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!