கணவனும், குழந்தைகளும் வேணாம்… 21 வயது கள்ளக் காதலன் தான் வேணும் அடம்பிடித்த இளம்பெண்!

சேலம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு நேற்று இளம்பெண்ணும், வாலிபரும் பதட்டத்துடன் சென்றனர். அவர்களிடம் அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று அப்பெண் கூறினார். வருவோருக்கெல்லாம் திருமணம் செய்து வைக்க இது திருமண மண்டபம் இல்லை.

உங்கள் பெற்றோர் யார்? கழுத்தில் இருப்பது தாலி தானே? என போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இருவரும் விடாப்பிடியாக கூறினர்.

விசாரணையில் 24 வயதான அப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த போது அங்கு பணியாற்றிய 21 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகி வந்துள்ளார். இவர்களின் பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். எனக்கு துரோகம் செய்து விட்டாய், இனி நீ எனக்கு வேண்டாம். என்று கணவர் கூறியுள்ளார்.

பெற்றோரும் எந்த கெட்டபழக்கமும் இல்லாத கணவரையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வழ்க்கையை தொலைத்து விடாதே. உடனே கணவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, குடும்பம் நடத்து என்று அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் அந்த பெண் கணவருடன் செல்லாமல், தனது மனம் கவர்ந்த காதலனை அழைத்துக் கொண்டு திருமணம் செய்து வைக்குமாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பெண்ணுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். ஆனால் அவரது கணவரோ, வந்தாலும் வராவிட்டாலும் கவலையில்லை. வந்தால் குழந்தைகளை கவனித்துக்கொள்ளலாம் என்றார்.

இதை தொடர்ந்து கணவருடன் செல்ல விரும்பாத இளம்பெண், பெற்றோருடன் செல்வதாக கூறினார். அந்த 21 வயது இளைஞரோ, காதலியின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என்றார்.

போலீசார் அறிவுரையை அறையும் குறையுமாக ஏற்றுக்கொண்ட அப்பெண் பெற்றோருடன் சென்றார். 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவர் மிகுந்த மனவேதனையுடன் வீட்டிற்கு சென்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!