பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா..?

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள்.

கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம்.

இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

இதன்படி இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பது தொடர்பான விளக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.

நாளை உத்தராயண புண்ணிய காலம். தைப்பொங்கல். பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7.45 முதல் 8.45 வரை. (சூரிய பகவானுக்கு வழுக்கையான தேங்காய், இளநீர் பாயாசம், காய்கறி கலந்து சாதங்கள் செய்தும் படைக்க வேண்டும்).

நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை மாலை 03.30 முதல் 04.30 வரை கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை ராகு காலம் – மாலை 04.30 முதல் 6 வரை இதேவேளை மாட்டுப் பொங்கல் ஜனவரி 16-ம்தேதி கொண்டாடப்படுகின்றது.

காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை மாட்டுப் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரமாக அமைகின்றது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!