தாய், மகளை அயன்பாக்சால் அடித்து கொன்ற கொள்ளையர்கள்!

முட்டத்தில் வீடு புகுந்து தாய், மகளை கொடூரமாக தாக்கி கொலை செய்து, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ் (54). துபாயில் ஓட்டல் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பவுலின் மேரி (48). 2 மகன்கள். மூத்த மகன் ஆலன் (25) தந்தையுடன் துபாயில் பணியாற்றி வருகிறார். 2வது மகன் ஆரோன் (21) சென்னையில் பி.இ. படித்து வருகிறார். பவுலின் மேரி தாய் திரேசம்மாளுடன் (91) வசித்து வந்தார்.

வீட்டு மாடியில் தையல் பயிற்சி வகுப்பு நடத்துவதோடு, துணிகளை மொத்தமாக ஆர்டர் எடுத்து தைத்தும் கொடுத்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் தையல் பயிற்சிக்கு வந்த இளம்பெண்கள் வீடு பூட்டி இருந்ததால், செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது.

இதையடுத்து மதியம் 12 மணியளவில், துணிகள் ஆர்டர் கொடுத்தவர்கள் வந்த போதும் கதவு திறக்கப்படவில்லை. வெளியே இருந்த டியூப் லைட் மற்றும் மின் இணைப்பு மீட்டர் பெட்டி உடைந்து கிடந்தது. கதவு துவாரம் வழியாக பார்த்த போது நடுஹாலில் ரத்த கறைகள் தெரிந்தன. புகாரின்படி வெள்ளிச்சந்தை போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திரேசம்மாளும், பவுலின் மேரியும் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பவுலின்மேரி அணிந்திருந்த நகைகளை காணவில்லை. இது 15 பவுன் இருக்கும் என கூறப்படுகிறது. பொருட்களும் சிதறி கிடந்தன. எனவே இருவரையும் கொலை செய்து விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளையர்களே வீட்டில் இருந்த சாவியை எடுத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

  • ரத்தக்கறையுடன் அயர்ன்பாக்ஸ்
    இரட்டைக் கொலை நடந்த வீட்டுக்கு நேற்று மாலை டிஐஜி பிரவேஷ் குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். விரைவில் துப்பு துலக்க உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு அருகில் இருந்த தென்னந்தோப்பை எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் ரத்த கறையுடன் கூடிய அயர்ன்பாக்ஸ் கிடந்தது. அதை கைப்பற்றி அதில் ஏதாவது தடயங்கள் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!