தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர்.. பின் நடந்த விபரீதம்!

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்.

திண்டுக்கல் அருகே எருமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48).டிரைவர்.இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல்-ஈரோடு ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!