விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த வங்கி அதிகாரி சாவு!

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து 4 நாட்களாக சிகிச்சையில் இருந்த அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வர் முத்துராமலிங்கம்(59). இவர் திண்டுக்கல் மாவ ட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சிய ம்மாபட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி உமாகோமதி(55). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஆத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல்மாதம் விருப்ப ஓய்வு ெபற்றார். இவருக்கு கடன் ெதால்லை இருந்ததால் தான் ஓய்வுபெற்ற பணத்தில் கடனை கட்டினார். இருந்தபோதும் கடன் முழுவதும் அடையவில்லை.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்து ராமலிங்கம், மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். 4 நாட்களாக சிகிச்சையில் இருந்த முத்துராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!