மனைவியிடம் பேசியதை கண்டித்த டிரைவரை அடித்துக் கொன்ற தம்பி..!

மயிலாடுதுறை அருகே தன் மனைவியிடம் பேசியதை கண்டித்த டிரைவரை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை கூறைநாடு தூக்கணாங்குலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாமியப்பன். லாரி டிரைவர் (வயது 52). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பு ஆனதாண்டவபுரம் ரோடு அருகே உள்ள தெருவில் வசித்து வந்துள்ளார். அதை விற்பனை செய்துவிட்டு தூக்குனாங்குலத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

இவர் வீட்டுக்கு அருகே அவருடைய தம்பி வீரமணியும் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரமணியின் மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்குசென்று விட்டாராம்.

தன் மனைவியிடம் நீ ஏன் அடிக்கடி தனிமையில் பேசுகிறாய் என சந்தேகப்பட்டு வீரமணியிடம் சாமியப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி அண்ணன் சாமியப்பனை தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த விழுந்த சாமியப்பனை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி அனுப்பி வை த்தனர். ஆனால் வழியிலேயே சாமியப்பன் பரிதாபமாக இறந்து விட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!