ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!


மும்பையைச் சேர்ந்த நபருக்கு, ஃபிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனம், ஐபோனுக்கு பதிலாக சோப்பை கொடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நவி மும்பை அருகேயுள்ள பன்வலி பகுதியைச் சேர்ந்தவர், தேம்ராஜ் நாக்ராலி(26). சாப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து இவர் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் ஐபோன் 8 ஆர்டர் செய்துள்ளார்.

அதற்காக தனது வங்கி கணக்கிலிருந்து உடனடியாக ரூ.55,000 பணத்தையும் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு இன்று பிளிப்கார்ட்டில் இருந்து ஒரு பார்சல் வந்தது.


கையெழுத்து போட்டு பார்சலை பிரித்த அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக வெறும் ரூ.10 மதிப்பு கொண்ட டிடர்ஜெண்ட் சோப்பு மட்டுமே இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிளிப்கார்ட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பிளிப்கார்ட் நிறுவனம், இந்த தவறு எப்படி நடந்தது என்பது விசாரணை செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக உரிய பொருள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. – Source: webdunia.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!