உக்ரைன் மக்களுக்காக டேவிட் பெக்காம் செய்த நெகிழ்ச்சி செயல்..!

மருத்துவ வல்லுனர்களின் சிறப்பான பணியை வெளிப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்த உக்ரைன் மருத்துவருக்கு அனுமதி அளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதல் 27-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் அரசு கட்டிடம் முதல் மருத்துவமனை, பள்ளி என எதுவும் தப்பவில்லை. பெரியோர் முதல் குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரஷியாவின் தாக்குதலில் அதிக அளவில் சேதமடைந்த நகரில் கார்கிவ் நகரும் ஒன்று. இங்குள்ள மகப்பேறு மருத்துவ மையத்தில் இரினா என்ற பெண் மருத்துவர் தலைவராக உள்ளார். இவரிடம் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது இன்ஸ்டராகிராம் கணக்கை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘இன்று (16 மணி நேரத்திற்கு முன்பு) நான் எனது சமூக சேனல்களை இரினாவிடம் வழங்குகிறேன். இவர் கார்கிவ் மாகாணத்தில் உள்ள மண்டல மகப்பேறு மையத்தின் தலைவராக உள்ளார். உக்ரைனில் உள்ள கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறார். உக்ரைனில் உயிர்களை காப்பாற்ற இரினா மற்றும் சுகாதாரா ஊழியர்கள் செய்யும் வரும் அற்புதமாக பணியை மேலும் வெளிப்படுத்த எனது ஸ்டோரி உதவியாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் டேவிட் பெக்காமை 71.7 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!