தாலி கட்டிய சில மணி நேரத்தில் புதுப்பெண் ஓட்டம்!

வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவருக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.

கடந்த 14-ந் தேதி காலை இளம்பெண்ணுக்கும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்த இளம்பெண் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண்ணை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தாலி கட்டிய சில மணி நேரத்திலேயே இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!