வரதட்சனை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் – அடம் பிடித்த மாப்பிள்ளை.!

மாப்பிள்ளை வரதட்சனை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் திருமணத்திற்கு வரதட்சனை வாங்குவது குற்றம் என சட்டம் இருந்தாலும் இன்று பெரும்பாலான திருமணங்களில் வரதட்சனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் தனக்கு வரவேண்டிய வரதட்சனை பாக்கி வந்தால்தான் தான் தாலி கட்டுவேன் என மாப்பிள்ளை பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் தான் அரசு வேலையில் இருப்பதாகவும் தான் பெண் வீட்டாரிடம் கேட்ட விஷயங்கள் இன்னும் வரவில்லை என்றும், அந்த பாக்கி பணம் வந்தால் தான் தான் தாலி கட்டுவேன் எனவும் கூறுகிறார். வீடியோவை எடுப்பவர் வரதட்சனை வாங்கவது தவறில்லையா என்ற கேள்வி கேட்ட போது அவர் எல்லோரும் தான் வரதட்சனை வாங்குகிறார்கள். நான் மட்டுமா வாங்குகிறேன் என அசால்டாக பதிலளித்தார்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!