சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…!


சியோமி நிறுவனத்தின் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ரெட்மி இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியான டீசர்களை தொடர்ந்து ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் ரோஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5A டார்க் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் ரோஸ் கோல்டு நிற ரெட்மி 5A விற்பனை செய்யப்படாமல் இருந்தது.

கடந்த மாதம் சியோமி வெளியிட்ட தகவல்களில் இந்தியாவில் இதுவரை சுமார் 10 லட்சம் ரெட்மி 5A ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதிய நிறம் தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.


சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் எச்டி IPS 1280×720 பிக்சல் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
– இன்ஃப்ராரெட் சென்சார்

சியோமி ரெட்மி 5A மூன்று நிற ஸ்மார்ட்போன்களும் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 5A ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் Mi.காம் வலைத்தளங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.4,999 முதல் துவங்குகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!