பெண்ணை கொன்று வீட்டிலேயே புதைப்பு – விசாரணையில் வந்த பகீர் தகவல்கள்!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் முத்துப்பேச்சி (40), மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் முத்துப்பேச்சி தனது சகோதரி பொன்னுத்தாயுடன் தனித்தனியாக வசித்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை மாலை முதல் முத்துப்பேச்சியைக் காணவில்லை என அவரது உறவினர்கள் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துப்பேச்சி வீட்டிற்கு அருகே உள்ள மனோஜ் என்பவரின் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு, வீட்டிற்குள்ளேயே புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மனோஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், சுரேஷ் மற்றும் மனோஜின் அக்கா சரண்யா, மனோஜின் அத்தை, இந்திராணி ஆகிய 5 பேரும் சேர்ந்துதான் முத்துப்பேச்சியை அடித்து கொலை செய்து அவர்களது வீட்டிலேயே புதைத்ததுவிட்டு, அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தகவும் கூறப்படுகிறது

இது தொடர்பாக 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் காவல்துறையினர் மனோஜ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளதாகவும் மற்றவர்களை தப்பவிட்டதாகவும் முத்துப்பேச்சியின் உறவினர்கள் புகார் கூறினர்.

மேலும் இது தொடர்பாக மீதமுள்ள 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி முத்துப்பேச்சியின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!