காதல் கணவரை பிரிந்து வாழும் பிரபல சீரியல் நடிகை ரக்‌ஷிதா?

.வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நடிகர்களுக்கான ரசிகர்கள் இங்கு அதிகம் அதிலும் பெண்கள். இன்றைய சின்னத்திரை முழுக்க முழுக்க வெள்ளித்திரைக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை. ஒரு படத்தில் வரும் ரொமான்ஸ், காமெடி, ஃபைட் என அனைத்துமே சீரியல்களிலும் வந்தாயிற்று. சமீபத்தில் பல சின்னத்திரை ஜோடிகள் தன்னுடன் பணியாற்றிய சக நடிகர்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் விவாகரத்து பெற்று தனித்தனியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வரிசையில் இப்போது சேர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை ரக்ஷிதா. ரக்‌ஷிதாவா யாரது? சரி மீனாட்சி என்றால் புரிகிறதா? அட ஆமா, சரவணன் மீனாட்சி கதையில தொடர்ந்து பல வருஷமா நடிச்சுட்டு வந்தாங்களே அவங்க தானே? அவங்களே தான்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி 2-ம் பாகம், 3வது பாகம், நாச்சியார்புரம் என பல சீரியல்களில் நடித்து நமது பக்கத்து வீட்டு பெண் போல் மாறியவர் ரக்‌ஷிதா. பொதுவாக சின்னத்திரையில் வெற்றி அடைந்து விட்டால் வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகைகள் இங்கு அதிகம். அதற்கு ரக்‌ஷிதா விதிவிலக்கல்ல.

இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து படங்களில் அவரை காண முடியவில்லை. பிறகு மீண்டும் சின்னத்திரைக்கே வந்தவர், அதே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் சிறிது காலம் நடித்தார். பின்பு அதிலிருந்து விலகினார். இப்போது வேறொரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவிருக்கும் சொல்ல மறந்த கதை என்ற புது சீரியலில் நடிக்கவிருக்கிறார் ரக்‌ஷிதா. 8 வருடங்களுக்கு முன்பு தான் முதன் முதலாக நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரக்‌ஷிதா தன்னுடன் ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் கூட ரக்‌ஷிதா பிசியாக நாடகங்களில் நடித்து வந்தார். தினேஷும் அவ்வப்போது நாடகங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் பிரச்னை என்ற தகவல் இணையதளத்தில் வைரலானது. அதாவது ரக்‌ஷிதா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்ததாலும், தினேஷிற்கு அந்த அளவு சீரியல்கள் வராததாலும் இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு வீட்டு பெரியவர்களும் இவர்களது பிரச்னையில் தலையிட்டு சமாதனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இருப்பினும் சிறிது காலம் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என இருவரும் எண்ணி, தனித் தனியாக வசித்து வருவதாகவும் தெரிகிறது. பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் வாழ்க்கையில் ஒன்றினைந்தவர்கள், சந்தித்த பிறகு தற்போது பிரிந்து விடுவார்களோ என்ற பயம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.- source: malaimurasu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!