குடும்பத் தகராறில் ஏற்பட்ட அவலம் – தூக்கில் தொங்கிய ஆசிரியர்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பகுதியான புலிக்கார பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் (37). மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் வீட்டைப் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நடு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேணிக்கரை காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து அவரது உடலை கைப்பற்றினர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வேல்முருகனின் குடும்பத்தாரிடம் விசாரித்து வந்தனர். அப்போது அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது அதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதில் வருத்தமடைந்த வேல்முருகன் அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!