6 மாசமா சம்பளமே இல்ல – சீனாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ராஜினாமா!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலும் வாபஸ் பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஜாவித் அகம்து காயிம் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் தூதர் பணியில் இருந்து விலகுகிறேன். கடந்த 6 மாதமாக தூதரகத்தில் யாருக்கும் சம்பளம் அளிக்கவில்லை. அலுவலக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தூதரக கார்களுக்கான சாவிகள் எனது அலுவலகத்தில் உள்ளன என பதிவிட்டுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!