இதிலிருந்து என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா!

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நடிகை சமந்தா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமந்தா பேசும்போது,

உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்திலிருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போதுதான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் துணையில்தான் நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!