பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் திடீர் மரணம்..!

தமிழில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.


காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற ஓ..மரியா என்ற பாடல் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடன இயக்குனர் கூல் ஜெயந்த். அதேபோல் வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில், , குஷி படத்தில் மொட்டு ஒன்று.., ப்ரியமானவளே-வில் வெல்கம் பாய்ஸ், ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்து இருக்கிறார்.

மேலும் பல வெற்றிப் படங்களுக்கும், விருது படங்களுக்கும் நடனம் அமைத்திருக்கிறார் கூல் ஜெயந்த். இந்நிலையில், கேன்சர் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. கூல் ஜெயந்த் மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!