தேங்காய் உடைக்கும் முறையும்… கிடைக்கும் பலனும்!

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். எந்தக் காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக் கூடாது.


வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியுமாக உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும்.

தேங்காய் உள்ளே பூ இருந்தால், குழந்தைப்பேறு உண்டாகும். தேங்காய் குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள்.

எந்தக் காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை பொருத்திப் பார்க்கக் கூடாது.

சிதறுகாய் உடைக்கும் பொழுது, நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால்தான், நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!