சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…!


சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த விண்ணப்பங்கள் கடந்த ஆண்டிலேயே கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு எரித்ரியாவைச் சேர்ந்தவர்களே ( 3,375) அதிகளவில் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். எனினும், இது முன்னைய ஆண்டை விட 35 வீதம் குறைவாகும். அடுத்து, சிரியாவில் இருந்து 1,951 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இது 9 வீதம் குறைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 1,217 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 62 வீத வீழ்ச்சியாகும். துருக்கியில் இருந்து 852 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 62 வீதம் அதிகரித்துள்ளது.

சோமாலியாவில் இருந்து 843 பேர் அடைக்கலம் கோரியுள்ளனர். அதையடுத்து, சிறிலங்காவில் இருந்து 840 பேர் சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளனர். இது 38.8 வீத வீழ்ச்சியாகும். – Source: puthinappalakai.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH