விஷ பாம்புகளின் இரத்தத்தை குடிக்கும் மக்கள்… ஏன் தெரியுமா..?


பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உண்டு.. உலகின் மிக ஆபத்தான உயிரினங்களில் பாம்புகளும் ஒன்றாக கருதப்படுகின்றன.. ஆனால் உலகில் பல நாடுகளில் பாம்புகள் உணவாக உண்ணப்படுகின்றன. அங்கு, தேநீர் காபி போன்று, பாம்பு ரத்தத்தையும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கிறார்கள். இப்போது இதற்கான காரணம் உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.. ஆம்.. உண்மையில், இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் விஷ பாம்புகளின் இரத்தத்தை குடிக்கும் ஒரு பழக்கம் உள்ளது.

இங்குள்ள மக்கள் பாம்பு ரத்தத்தை மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் பாம்புகளின் இரத்தம் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. பாம்புகளின் இரத்தத்திற்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாம்புகள் கொல்லப்படுகின்றன. பாம்பு ரத்தம் விற்கும் இந்த கடைகள் மாலை முதல் இரவு வரை திறந்திருக்கும். இங்குள்ள ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பெண்கள் தங்கள் சருமத்தின் அழகை அதிகரிக்கவும் அதனை குடிக்கிறார்கள்.

இருப்பினும், பாம்பு ரத்தத்தை குடித்த பிறகு, குறைந்தது மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை தேநீர் அல்லது காபி குடிக்க கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் இரத்தம் உடலில் அதன் வேலையைச் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், வியட்நாமில் பாம்புகளை உண்ணும் பாரம்பரியம் உள்ளது. இங்கு வடக்குப் பகுதியின் காடுகளில் இருந்து பிடிபட்ட பாம்பு இறைச்சி அதிக உடல் வெப்பநிலையைக் குறைக்கவும், தலைவலி மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை போக்கவும் உட்கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!