வாட்ஸ்அப்க்கு மாற்றாக தமிழர் உருவாக்கிய புது ஆப்..!


வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கி இருக்கும் புதிய செயலி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்த பின் இந்த செயலிக்கு மாற்றாக வேறு செயலியை பயன்படுத்த இருப்பதாக பலர் தெரிவித்து வந்தனர். வாட்ஸ்அப் பயனர்களில் பலர் சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.

எனினும், பலர் இந்தியாவில் உருவான குறுந்தகவல் செயலியை பயன்படுத்தலாமா என பரிசீலனை செய்கின்றனர். இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அரட்டை செயலி உருவாகி இருக்கிறது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!