பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா..?


பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த ஜோதிடர் பி.வி.ரமணி அய்யர் அளித்துள்ள நேரம் வருமாறு:-

நாளை (14-ந் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 11.35 மணி முதல் 1.30 மணி வரையும் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்.

15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து படைக்க உகந்த நேரம் ஆகும்.

ஹரித்துவார மங்கலம் ஜோதிடம் ஆர்.ராஜாராம அய்யர் கணித்துள்ள விவரம் வருமாறு:-

நாளை (14-ந் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அடுப்புகள் கட்டி காலை 11.05 மணிக்கு மேல் பொங்கல் வைத்து பகல் 1.30 மணிக்குள் பூஜை நிவேதனம் செய்து போஜனம் செய்ய உகந்தமான நேரம் ஆகும்.

15-ந் தேதி மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்குள் மாட்டுத்தொட்டி கட்டி பகல் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் மாடுகளை குளிப்பாட்டி மாலை 4.30 மணிக்கு மேல் மாட்டுப் பொங்கல் வைத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மாட்டுப் பொங்கலிட்டு பூஜை செய்து மாடுகள் விட உத்தமமான நேரம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் கணித்துள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!