துன்பம் அனைத்தும் மறைய சீரடி சாயிபாபா சொன்ன பொன்வாக்குகள்..!


1.சீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் அனைத்தும் மறைந்து நலமடைவான்.

2. துவாரகாமாயியை அடைந்த பொழுதில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான மகிழ்ச்சியை அடைவார்கள்.

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு நிறைய ஆசிகளையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.

5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

6. என்னுடைய மசூதியில் இருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னைத் தஞ்சம் அடைபவர்களுக்கும் என் வழிகாட்டுதலுக்காக, என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை மகிழ்ச்சியடையச் செய்வேன்.

9. நீ என் பேரில் உன் பளுவைச் சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.இவை நீங்கள் தரிசிக்கும் சீரடி சாயிபாபா சொன்ன பொன்வாக்குகள்.-Source: athavannews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!