விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது…. ஏன் தெரியுமா?


சிவன் ஆலயத்தில் தரிசனம் முடிந்து அமரலாம்… ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது என்று சொல்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

* சிவன் ஆலயத்தில் தரிசனம் முடிந்து வெளியேவந்து கொடிமரத்திற்கு அருகில் நமஸ்காரம்செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வர வேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை.
.
* விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும்போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள். அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விடவேண்டும். இல்லாவிட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!