ஆண்கள் குழந்தை பாக்கியம் பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!


இந்த உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் ஊக்கம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். சூரியன் தான் நவ கிரகங்களில் ஆண்மை கிரகமாகும்.

ஆண்மைக்கு உண்டான ஆற்றலை வழங்குபவர் சூரிய பகவான் தான். ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு குழந்தைப்பேரு தள்ளிப்போய்க் கொண்டிருக்கும். இதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் உண்டு.

ஆண், பெண் என குறை யாரிடம் இருந்தாலும் பெண் மடடுமே இறைவனிடம் வேண்டுவது போதாது. இருவரும் இணைந்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதனால் ஆண்கள் சூரியனை வழங்குவதன் மூலம், பல பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இவ்வாறு வழிபடும்போது,

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

என்னும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

குதிரை கொடியை உடையவனே, தன்னுடைய கரங்களால் உலக மக்களை ரட்சித்து அருள் புரியும் சூரிய பகவானை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருளிபுரிய உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.

இந்த மந்திரத்தை, சூரியனை வழிபட்டு, தினமும் 108 முறை ஜெபித்து வந்தால், புத்திர பாக்கியம் உண்டாகும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!