கடன் தொல்லையால் தறி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் தறி தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் அவரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம் பாளையம் கரிச்சங்காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. தறி தொழிலாளியான இவர் கடன் தொல்லையால் கடும் அவதிப்பட்டு வந்தார்.

கடனை அடைக்க முடியாமல் கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி, இன்று தனது குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பாலில் அரளி விதையை அரைத்து கலந்து அனைவரும் குடித்துள்ளனர்.

இதில் சுப்பிரமணி, அவரின் மனைவி மேனகா ஆகியோர் உயிரிழந்தனர். மகள் பூஜா ஸ்ரீ, மகன் நவீன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!