கணவன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்…!


மதுரை மேலூர் அடுத்துள்ள கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமார் என்ற நபருக்கும், து.அம்பலகாரன்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரேஸ்வரி என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவர் பழனிக்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் விடுமுறையில் தான் சொந்த ஊருக்கு வருவார். இதனிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததால் தனது தாய் வீட்டில் இருந்த சுந்தரேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மாமியார் வீட்டிற்கு சென்ற மூன்றாவது நிலையில் மர்மான முறையில் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் பெண்ணின் தந்தை வரதட்சணை கேட்டு மாமியார் மாமனார் இருவரும் சேர்ந்து மகளை அடித்து கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பெண்ணின் உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறியதாவது, திருமணமான நாள் முதல் வரதட்சணை கேட்டு கொண்டே இருந்ததாகவும், நாங்களும் அவர்கள் கேட்டதை செய்து கொண்டே தான் இருந்தோம் என்றும், கடைசியில் தங்க அரையாண் போடவில்லை என்று பெண்ணை அடித்து கொலை செய்து விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளனர்.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!