பூஜையறையில் லட்சுமி கடாட்சம் பெற ஸ்ரீசக்கரத்தை எப்படி பூஜிக்க வேண்டும்..?


லட்சுமி கடாட்ச சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழிமுறைகளை கனவு மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன்கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக அரிய மந்திரத்தை தந்துள்ளார். இந்த மந்திரத்தை தினந்தோறும் 1008 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.

லட்சுமி கடாட்ச சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழிமுறைகளை கனவு மூலம் அறிந்துக் கொள்ளலாம். தேவிக்கு நிவேதனமாகப் பால் பாயசத்தை படைக்கலாம்.

இந்த சக்கரத்தை வெள்ளி அல்லது செப்பு தகட்டில் பதித்துப்பூஜை செய்து வீட்டில் பூஜையறையில் சட்டம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றிக்கிடைக்கும். ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் எழுதி வரலாம். நல்லபலன்கள் கிடைக்கும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!