ஒருவேளை சோறு போட கூட ஆள் இல்ல… விபரீத முடிவு எடுத்த பெற்றோர்..!


மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள வைகை காலனியை சேர்ந்த மச்சக்காளை – பசுபதி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில், ஒரு மகன் கோவை மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

மேலும் மற்றொருவர் சவுதியிலும், இன்னொரு மகன் மதுரையிலும் வசித்து வருகிறார். இந்நிலையில் மச்சக்காளை – பசுபதி தம்பதிக்கு வயதாகிவிட்ட நிலையில், மதுரையில் வசிக்கும் மூன்றாவது மகன் வீட்டின் வீட்டில் மாடியில் உள்ள ஒரு சின்ன வீட்டில் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த தள்ளாத வயதில் பசிக்கு ஒரு வேளை சோறு போட கூட ஆள் இல்லாததால், இருவரும் இதை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!