திருமணம் ஆகி ஒரே ஆண்டில் கணவர் எடுத்த விபரீத முடிவு


ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன் தினம் மாலை மனைவியுடன் சிறிய விசயத்திற்கு சண்டை போட்டுள்ளார். பிறகு நிகில் பின்னர் தனது அறைக்குள் சென்றுவிட்டார். அறைக்குள் சென்று வெகுநேரமாகியும் நிகில் வெளியில் வராததால் பயந்து போன மனைவி கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

இதனால் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது நிகில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இளம் தம்பதியினருக்கு இடையே சின்ன விசியத்திற்கெல்லாம் நிகிலும் அவர் மனைவியும் அடிக்கடி சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட வெகுநேரம் குடும்பத்தாருடன் சிரித்து பேசி கொண்டிருந்தார்.

பின்னர் நடுஇரவில் தான் தூங்க சென்றார். அடுத்தநாள் மதியம் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போதே திடீரென இந்த முடிவை நிகில் எடுத்துள்ளார்.-Source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!