சென்னை இளைஞர் மேல் ஆசைப்பட்டு வட இந்திய பெண் செய்த காரியம்..!


மூன்று குழந்தை பெற்ற பெண் இஷா தேசாய். இவர் குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்தவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இஷா விவாகரத்து செய்துவிட்டார். கணவனை விவாகரத்து செய்துவிட்டு தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து தாய் மற்றும் குழந்தைகளுடன் அடுக்குமாடி வீட்டில் இஷா வசித்து வந்தார். இதனிடையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இஷாவுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இஷா அவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இந்த நிலையில் நேற்று அந்த இளைஞருடன் இஷா போனில் வெகுநேரம் பேசிய போது சென்னை இளைஞர்ருக்கு ஏற்கனவே திருமண மாகிவிட்ட விடயம் இஷாவுக்கு தெரியவந்தது.

இதனால் ஆதிர்ச்சியும், கோபமும் அடைந்த இஷா நேராக தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். வெகுநேரமாகியும் இஷா வெளியில் வராததால் அவர் தாயார் அருகில் வசிக்கும் தச்சனை அழைத்து கதவை திறக்க வைத்தார்.

அப்போது இஷா தூக்கு மாட்டிக்கொண்டு சடலமாக தொங்குவதை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர். மறுமணம் செய்துகொள்ள நினைத்து காதலித்த இளைஞருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதை அறிந்து மனமுடைந்து தூக்கில் தொங்கியுள்ளார்.-Source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!