16 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்..!


திருவாரூரில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள குன்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது பெற்றோர் விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

சிறுமி வசிக்கும் வீட்டின் எதிரே ஜான்சன் என்பவர் குடியிருந்து வருகிறார். அவரது வீட்டிற்கு நண்பர் மருதவனம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய கார்த்திக், அவருடன் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளார். அவ்வப்போது குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த ஜான்சன் மற்றும் அவரது மற்றொரு நண்பரான விஸ்வராஜ் ஆகியோர் கார்த்திக் உடந்தையுடன் சிறுமியை கடந்த 4 மாதங்களாக குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

நேற்று மாலை திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் டாக்டர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சிறுமியிடம் கேட்டபோது, அவர் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திக், ஜான்சன், விஸ்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தல், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது திருவாரூரில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!