இங்கிலாந்தில் இத்தனை பேருக்கு கொரோனாவா..? தலைமை அறிவியல் ஆலோசகர் பகீர் தகவல்


இங்கிலாந்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு தலைமை அறிவியல் ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 590 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் உண்மையாக ஏற்கெனவே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் போட்ரிக் வெலன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தலைமை அறிவியல் ஆலோசகரின் இந்த கருத்து அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!