போலி டாக்டர் கழுத்தை அறுத்து கொலை…! திருமங்கலம் அருகே பயங்கரம்


போலி டாக்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 67). தனியார் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் மனைவி செல்வி மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார்.

வாடகை வீட்டில் வசித்து வந்த பால்ராஜ் டாக்டர் என கூறிக்கொண்டு கிளீனிக் நடத்தினார். அவருக்கு உதவியாக செல்வி செயல்பட்டுள்ளார்.

திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணையில், பால்ராஜ் போலி டாக்டர் என தெரிய வந்ததால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சிறிது காலம் கழித்து மீண்டும் மருத்துவம் பார்த்த பால்ராஜ் மற்றும் செல்வியை கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

வீட்டோடு இணைந்த கிளீனிக்கில் நேற்று இரவு பால்ராஜ் பணி செய்துள்ளார். இன்று காலை 4 மணியளவில் அந்த அறையில் மின் விளக்கு எரிவதை வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் பார்த்தார்.

அவர் அங்கு சென்றபோது போலி டாக்டர் பால்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலி டாக்டர் பால்ராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் கொலை நடந்திருக்கலாமா? அல்லது நிலத்தகராறில் நடந்திருக்கலாமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பால்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலி டாக்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!