கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இதுவரையில் 3042 பேர் பலி..!


கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் மேலும் 30 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 3042 ஆக உயர்ந்துள்ளது

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 85 நாடுகளில் பரவி உள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3012 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 30 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3042 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்த 30 பேரில் பெரும்பாலானவர்கள் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுதவிர நேற்று புதிதாக 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 80 ஆயிரத்து 552 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!