செங்கோட்டையன் பதவி பறிப்பு… சட்டசபை அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்..!


தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக இருந்த செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் அவை முன்னவராக இருந்தார் . அ.தி.மு.க கடந்த ஆண்டு சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்தபோது, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டார்.

இரு அணிகள் இணைந்த நிலையிலும், வரும் 8-ம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையிலும் அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கபட்டுள்ளார். அவருக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!