மலேசியாவில் ஒரே மேடையில் ‘ரஜினி-கமல்’ – அப்படி என்ன தான் பேசப் போகிறார்கள்..?


மலேசியாவில் தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா சனிக்கிழமை நடக்கிறது. அப்போது ரஜினி, கமல் இருவரும் ஒரே மேடையில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவை தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை மற்றும் மலேசிய அரசு இணைந்து நடத்துகிறது.

இதில் பல்வேறு நடிகர்-நடிகைகளின் நடனம், நகைச்சுவை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் 340 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். எனவே இதற்காக நாசர் உள்பட பல்வேற நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். இந்த விழாவில் கமல்ஹாசன் மற்றும். நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்கள். இதற்காக இருவரும் நாளை மலேசியா புறப்படுகிறார்கள்.

இந்த கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அரசியல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியாகலாம் என தெரிகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!