துன்பங்களை பறந்தோடச் செய்யும் கால பைரவர் ஸ்தோத்திரம்


கால பைரவருக்கு உகந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

கால பைரவர் ஸ்தோத்திரம்
கால பைரவர்
நிர்வாணம் ஸ்வாந வாஹனம்
த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே பூத பிசாச நாத

வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்

– காலபைரவ ஸ்தோத்திரம்

பொதுப்பொருள்: சிவப்பு நிறத்துடன் பிரகாசிக்கும் ஜடாமுடியை உடையவரும், தூய்மையானவரும், ஒளியே வடிவான ரக்த வர்ண அங்கங்களைக் கொண்டவரும், முறையே கைகளில் சூலம், மண்டை ஓடு, பாசக்கயிறு, டமருகம் போன்றவற்றை ஏந்தி, இந்த உலகத்தைக் காப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், எப்பொழுதும் பேரானந்தத்துடன் திகழ்பவரும், பூத பிசாசங்களுக்குத் தலைவனானவரும், ப்ரம்மச்சாரியானவரும், முக்கண்களுடன் சிவாம்சமாகத் திகழ்பவரும், காசி திருத்தலத்தை பரிபாலிப்பவரும், திகம்பரருமான கால பைரவரை வணங்குகிறேன்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!