ஆண் போல் வேடமிட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்!


ஆந்திராவில் ஆண் போல் வேடமிட்டு 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஈடுகலபாடு கிராமத்தைச் சேர்ந்த ரமாதேவி (18) என்ற பெண், ஆண்களைப் போல் முடிவெட்டி, உடைகளை அணிந்து மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்துவிட்டு ஒருவாரத்தில் வெளியூரில் வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து மாயமாகி உள்ளார். இந்நிலையில், மூன்றாவதாக திருமணம் செய்த மோனிகா என்ற பெண்ணின் மூலம் அவர் பெண் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மோனிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரமாதேவியின் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர் ஆண் வேடமிட்டு ஏமாற்றியதற்கான காரணம் பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!