வடக்கில் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்..!


வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை- கரம்பனில் இருந்து, அனலைதீவு, எழுவைதீவுக்கான புதிய படகுச் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“வடக்கு அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர். சிங்கள காவல்துறையினரே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

சிங்கள காவல்துறை அதிகாரிகள் மீதே தமிழ் அரசியல்வாதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!