மகளை மோசமான வார்த்தையால் திட்டிய நபர்… கொதித்து எழுந்து குஷ்பு செய்த தரமான செயல்!


குஷ்புவின் மகளை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்த நபரை அவர் திட்டிய சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காலத்தில் சினிமாவில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் குஷ்பூ. இவருக்காக அந்த காலத்தில் ரசிகர்கள் கோவில் கட்டியதுண்டு. தற்போது படங்களை விடுத்து, டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவரின் பெயர் ஆனந்திதா. மற்றொருவரின் பெயர் அவந்திகா.

இந்நிலையில் சமீபத்தில் குஷ்பு தீபாவளி பண்டிகையை ஆனந்திதாவுடன் கொண்டாடினார். இருவரும் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, அவந்திகாவை மிஸ் செய்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஆனந்திதாவின் உடலை பார்த்து அசிங்கமாக பேசியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் குஷ்பூ அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்பூ அந்த நபரை சற்று தரக்குறைவாக திட்டியுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!