வனவியல் பயிற்சி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த இளைஞன்..!


ஆண்டிப்பட்டி அருகே வனவியல் பயிற்சி கல்லூரியில் மதுரையை சேர்ந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் வனவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மதுரை பொன்னகரத்தை சேர்ந்த விஜயநாராயணன்(32). என்பவர் வனவராக பயிற்சி பெற்று வந்தார்.

இக்கல்லூரியில் மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் நடந்த குரூப்-2 தேர்வில் விஜயநாராயணன் உள்பட 15 பேர் எழுதினர். இதில் விஜயநாராயணனைத் தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விஜயநாராயணன் இன்று தனது கல்லூரி விடுதி அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!