மனைவியை துடிதுடிக்க வெட்டி கொன்று கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு..!


நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி கோணங்கிபாளையத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 48).

சித்தன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபடுவார். அப்போது மேலும் மது குடிக்க பணம் கேட்பதுடன், மனைவியின் நடத்தையில் சந்தேகித்து அடித்து உதைப்பார். மேலும் யார், யாரிடம் போனில் பேசினாய் என்று கேட்டும் அடிக்கடி தாக்குவார்.

இது போல நேற்றிரவும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சித்தன், மது குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சித்தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் நிலை குலைந்த ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து மரண ஓலமிட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த சித்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் சித்தனை தேடிய போது வீட்டின் பின் பகுதியில் உள்ள சோளக்காட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் சித்தன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த மல்லமூப்பம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்தன்-ஈஸ்வரி தம்பதிக்கு அய்யன்துரை (27), கிருஷ்ணமூர்த்தி (25), முருகன் (23)என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் மகனும், கடைசி மகனும் வீட்டில் தறி தொழில் செய்து வருகிறார்கள் . கிருஷ்ணமூர்த்தி மட்டும் காகாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!